Skip to content
Home » திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Senthil

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் நடவடிக்கை சரியாகத்தான் இருக்கும். அவர்கள்  ஊழல் செய்ய மாட்டார்கள், லஞ்சம் வாங்க மாட்டார்கள். என ஒரு மாயதோற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி, அமலாக்கத்துறையினர்  பரிசுத்தவான்கள் என்பது போல ஒரு பிம்பத்தை  இமலாய அளவுக்கு  கட்டமைத்து இருந்தனர்.

ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  மத்திய அரசின் தூண்டுதலில் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து  சோதனை செய்யும் என்பதும்,  பாஜகவின் ஒரு பிரிவு போல அது செயல்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அது உண்மை தான் என்பதை இன்று நடந்த ஒரு சம்பவம்  உறுதி செய்து  உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  செட்டிநாயக்கன் பட்டி என்ற இடத்தில்  திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ,  அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை போட்டனர். காரில் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அந்த பணத்திற்கான கணக்கு  காரில் இருந்தவரிடம் இல்லை.  காரில் இருந்தவர் தன்னை  மத்திய அரசின்  அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது  பெயர் அங்கித் திவாரி என்றும் கூறினார். அதன் பேரில் அவரிடம் இருந்த அடையாள அட்டையை வாங்கி  ஆய்வு செய்தனர். அவர்

அமலாக்கத்துறை அதிகாரி என்பது உறுதியானது. அந்த பணம் எப்படி வந்தது என அவர் கூறவில்லை. எனவே அந்த பணத்தை யாரிடமும் லஞ்சமாக பெற்றாரா அல்லது   யாரிடமும் கொடுக்க எடுத்து சென்றாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சத்துடன் சிக்கியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!