Skip to content
Home » உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

  • by Senthil

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவர் கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்கிறார்.  நடப்பு தேர்தலில் இவரது மகனுக்கு மீண்டும்  பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த நிலையில்  எடியூரப்பா மீது கர்நாடக போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு  பெண் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பா வீட்டுக்கு வந்து உள்ளார். ஒரு மோசடி வழக்கு தங்கள் மீது   பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என உதவி கேட்டு வந்து உள்ளனர்.

அப்போது வீட்டில் ஒரு தனி அறைக்கு  17 வயது சிறுமியை  எடியூரப்பா  அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.  சதாசிவ நகர் போலீசார் எடியூரப்பா மீது  போக்சோ வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். போக்சோ வழக்குப்பதிவு செய்ததால்  விரைவில்  எடியூரப்பா கைது செய்யப்படலாம்என்ற பரபரப்பு கர்நாடக அரசியலில்   நிலவுகிறது.

பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியே சொல்ல வேண்டாம் உனக்கு எல்லா உதவிகளையும் செய்கிறேன். மீறி புகார் செய்தார் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் எடியூரப்பா சி்றுமியை மிரட்டி உள்ளார் என்றும்  புகாரில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!