மேட்டுப்பாளையம், மூணு குட்டை கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இலை சேகரிக்க வனத்திற்கு சென்ற முதியவர் வெள்ளியங்கிரி உயிரிழப்பு. சிறுத்தை தாக்கி இருக்கலாம் என சந்தேகம்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் வனப்பகுதிக்குள் தேடியதில் தலையில்லாத நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
