சென்னை சூளை ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்ற 70 வயதான சாவித்திரி என்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, 242பி தடம் கொண்ட மாநகரப் பேருந்தை ஓட்டி வந்த சேகர் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
