சென்னை புறநகர் ரெயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ரெயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. அலுவலக நேரத்தை கருத்தில் கொண்டு சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
