Skip to content
Home » சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி திருமணம் தொல்.திருமா பங்கேற்பு…

சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி திருமணம் தொல்.திருமா பங்கேற்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல் திருமாவளவன் கடந்த நான்கு தினங்களாக அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த நிலையில் இன்று காலை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை

மேற்கொண்டுள்ளார். பிரச்சாரத்தின் போது குமராட்சி பகுதியில் விசிக கட்சியை சேர்ந்தவரின் திருமணம் நடைபெறுவதை அறிந்த தொல். திருமாவளவன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார். குமாரட்சி ஊராட்சியில் கட்சியின் இளையராஜா சுபாஷினி ஆகியோரின் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். உடன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!