தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தலில் அனைத்து கட்சிகளும் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரும் 23ம் தேதி பகல் 12 மணிக்கு, மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அறிவித்து உள்ளார்.