கோவை: மதுக்கரை வனப்பகுதியில் மின் மாற்றியில் கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்ததில் யானை உயிரிழப்பு. உயிரிழந்த ஆண் யானை 25 வயது மதிக்கத்தக்கது என வனத்துறை தகவல். வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களுக்கான மின்சார கட்டமைப்புகளை யானைகள் அணுகாதவாறு கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மின்வாரியத்திடம் வனத்துறை வலியுறுத்தியுள்ளது.
கோவையில் மின்சாரம் தாக்கி யானை பலி..
