மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊர்வலத்தின் போது துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்ற விஜய் என்ற ஆட்டோ டிரைவரை யானை ஆத்திரத்துடன் தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.
படுகாயம் அடைந்த அவரை மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
