Skip to content
Home » இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மதுரை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. 

இம்மானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி அவரது  சொந்த ஊரான பரமக்குடியில்  அவரது முழு உருவ சிலையுடன்  மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!