Skip to content
Home » இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்தில்  நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது. ஆட்சியில் இருந்த  கன்சர்வேடிவ் கட்சிக்கும்(இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி கட்சி்)  கட்சிக்கும்,  லேபர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர்  உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இந்நிலையில், லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார்.  அவரது கட்சி  பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.  இதனால் அவர் பிரதமராகும்  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.. கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளார் ரிஷி சுனக்  மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளார். இந்திய நேரப்படி இன்று காலை கிடைத்த தகவலின்படி  650 தொகுதிகள் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  லேபர் கட்சிக்கு 250 தொகுதிகள் கிடைத்தன.  அதே நேரத்தில்  சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு  50 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.   லேபர் கட்சி  450 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார்.  இந்த தேர்தல் மூலம் 14 ஆண்டு கால  கனசர்வேடிவ்  கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 14 ஆண்டுக்குப் பிறகு இக்கட்சி ஆட்சியைப் பிடித்தால் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்பார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!