நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் திடீரென 2 பேர் கோஷம் போட்டு சபாநாயகரை நோக்கி ஓடிய நிலையில் புகை குப்பிகளையும் வீசினர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக மாநிலம் மைசூர் தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்கா தான் மக்களவைக்குள் செல்ல பாஸ் வழங்கி உள்ளார்.
எனவே பாஜக எம்.பியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் உங்களுக்கு எப்படித் தெரியும், எந்த அடிப்படையில் அவர்களுக்கு நீங்கள் பாஸ் வழங்கினீர்கள் என விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே பார்வையாளர்கள் பாஸ் வழங்க எம்.பிக்களுக்கு தடை விதித்து சபாநாயகர் ஓம்பிர்லா இன்று உத்தரவு பிறப்பித்தார்.