சட்டப்பேரவை முடிந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் மீண்டும் ஏற முயன்ற சுவாரஸ்யம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சிகாலத்திலும் அப்போது துணை முதலமைச்சராக இருந்த உதயநிதியின் காரில்

தவறுதலாக இபிஎஸ் ஏற முயன்ற சம்பவம் நடந்தது. இந்த நிலையில், இன்றும் அதே போன்று தவறுதலாக உதயநிதி காரில் ஏற முயன்ற அவரை “அது எதிர்க்கட்சித் தலைவரின் கார் சார்” எனக் கூறி காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
