சென்னை, திருமுல்லைவாயிலில் ஸ்பா நடத்தி வந்த ஜெனிபர் என்பவரிடம் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறி, அதை தொடர்ந்து நடத்த மாதம் ரூ.50,000 லஞ்சம் கேட்ட பெண் சிறப்பு எஸ்.ஐ. அமுல் மற்றும் எஸ்.ஐ. பாக்கியலட்சுமி ஆகியோர், ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நடத்திய இந்த நடவடிக்கையால், பெண் போலீசார் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
