பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ரகசிய உளவாளி’ என்றும் கூறிய மணீஷ் குமார் குப்தா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாகன சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும், நீண்டகாலமாக அந்தப் பதவியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி 2 சொகுசு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
