பவானி அருகே விவசாய நிலத்திற்கு செல்வதற்கான பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளநாயக்கர் என்பவர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ததாக அவரது உறவினர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்துக்குப் பின்னர் தப்பியோடிய ரங்கசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
