அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் நிலக்கடலை கடலை பருப்பு பொட்டுக்கடலை உளுந்து பச்சைப்பயறு அரிசி உள்ளிட்ட நவதானியங்களைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் இயற்கை ஆர்வலர்கள் கோலம் போட்டனர். இது குறித்து பள்ளி குழந்தைகள் தெரிவித்ததாவது நவதானியங்கள் நமது உடலுக்கு நன்மை செய்யக்கூடியது என அனைவரும் அறிந்த ஒன்று தான் அதே போல அன்றாடம் சிறுதானியங்களை நாம் அனைவரும் பயன்படுத்திட வேண்டும் என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கோலத்திற்கான உணவுப் பொருட்களான நவதானியங்களை தேர்வு செய்தோம் என்றும் மேலும் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான சாதி சமயங்கள்
கடந்த உழவர் என்ற ஒத்த கருத்துடைய உழவனின் கருவிகளுக்கும் உழவனுக்கு உறுதுணையாக இருந்து காலங்காலமாக உதவி வரும் கால்நடைகளுக்கும் உழவனின் உழைப்பாலும் இந்த மண்ணின் வளத்தாலும் உருவான இந்த நவதானியங்களால் உருவான கோலத்தின் வாயிலாக உழவனுக்கு பெருமை சேர்க்கும் முயற்சியாக இந்த கோலத்தை அர்ப்பணிக்கின்றோம் என்றனர். இந்த நவதானியங்களால் உருவான கோலத்தை உருவாக்க 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆனதாக கூறினர். மேலும் நவதானியங்களால் உருவாக்கப்பட்ட இந்த கோலத்தினை கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பலரும் பார்வையிட்டனர்.