Skip to content
Home » டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

  • by Senthil

டில்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர். படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாடியில் இருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், 11 வாகனங்களில் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர். இந்த விபத்தில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் மின்சார மீட்டரில் தீ விபத்து ஏற்பட்டதுடன், மின் உபகரணங்களில் இருந்து புகை வெளியேறியதால் மாணவர்கள் பீதியடைந்து, பயிற்சி மையத்தின் பின்புறம் வழியாக கயிறு கட்டி கீழே இறங்கத் தொடங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!