Skip to content
Home » ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

  • by Senthil

.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தொண்டு நாள் மற்றும்  வார விழா கொண்டாடப்பட்டது.  ஒரத்தநாடு தீயணைப்பு  நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் வினியோகம் செய்யப்பட்டது. ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அனந்தசயனன் தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோடை காலங்களில் தீவிபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?   விபத்து ஏற்பட்டால்  அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகள் குறி்த்து அந்த  பிரசுரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!