புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து Indian Medical Association (IMA) உதவியோடு உயிர் காக்கும் முதலுதவி (Basic Life Support BLS) சிகிச்சைக்கான 5000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி தலைமை வகித்துமாணவர்களிடையே முதலுதவியின் முக்கியத்துவம்,விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.மாநிலதிமுக மருத்துவர் அணி துணைத்தலைவர்டாக்டர் அண்ணாமலை ரகுபதி,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே .கே. செல்லபாண்டியன் , நகர திமுக செயலாளர் ஆ.செந்தில்,
வடக்கு மாவட்டதிமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர்மு.க. முத்துகருப்பன் , தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.சுதர்சன், ஒருங்கிணைந்த மருத்துவ அணியின் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும், இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.