மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் – கனமழை வெள்ளத்தால் படகு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த சென்னை – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மீன்வளத்துறை சார்பில் ரூ.12.88 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை கலைவாணர் அரங்கில் இன்று வழங்கினோம்.
மழை, வெள்ளம் சூழ்ந்த சமயத்தில் மீட்புப் பணிகளில் நமது அரசுக்கு பக்க பலமாக இருந்து உதவிய மீனவர்களின் துணிச்சல் போற்றுதலுக்குரியது, மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம். அரசு வழங்கிய நிவாரண உதவிகளின் மூலம், சேதமடைந்த விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள், மீன்பிடி வலைகள், இயந்திரங்களை சரி செய்து மீண்டும் மீன்பிடி தொழிலை தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.