ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில்,உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கொடிமரத்திற்கு பட்டாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு தங்க கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 14ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

