Skip to content
Home » புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி கட்ட நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 23.09.2023 அன்று கடைசி நாள்

இப்பயிற்ச்சியின் சிறப்பு அம்சங்கள் :

1) பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய Internship training வழங்கப்படும்.

2) பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர்.

சலுகைகள்:

1) பயிற்சிக் கட்டணம் இல்லை (2) கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/- 3) கட்டணமில்லா பேருந்து சலுகை (4) விலையில்லா மிதிவண்டி (5) விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், (6)

விலையில்லா சீருடைகள் – 2 செட் (7) விலையில்லா காலணி – (8) பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது.

இது தொடர்பாக புள்ளம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) முதல்வரை 949905572, 9499055722 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அறிந்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்து குறிப்பில் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!