ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28), இன்று காலை ஸ்ரீரங்கத்தில் 6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அன்பு கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் மேலூர் சாலையை சேர்ந்த தினேஷ் பாபு உள்ளிட்ட, 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.