விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்காக ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டம் தொடரும். விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
