Skip to content
Home » விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில்  ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது:

நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம் வந்து உங்களது மாமா விபத்தில் சிக்கி காயம்அடைந்துள்ளார் என கூறினார். அதை நம்பி நாங்கள் இருவரும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அவர் எங்களை, வாழ்வாங்கி பகுதியில் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்றிருந்தனர். திடீரென அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கினர். மேலும் எங்களைஅங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மேற்கண்ட 4 பேரின் கூட்டாளியாக ராஜ்குமார் இருந்துள்ளார் என்பதும், அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கிவிரட்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார், பாலு, மற்றொரு ராஜ்குமார், சுந்தரமகாலிங்கம், கனி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!