Skip to content
Home » ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தேசபிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவேல் தலைமையில் காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று அனுசரிக்கும் விதமாக
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், விவசாய சங்க சத்தியமூர்த்தி, சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் முகமது ரஷீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு காந்தி திருவுருவ சிலை முன்பாக அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!