Skip to content
Home » பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

திராவிட முன்னேற்ற கழக இந்தியா கூட்டணி கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார் . இன்று வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் , கரையான்பாளையம் , பருத்தியூர் , அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை முதல் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசியவர் கடந்த மூன்று ஆண்டுகள் திராவிட மாடல அரசு பெண்களுக்கான அரசாக இருந்து வருகிறது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம பங்கு வழங்கி பெண்களை தன் வீட்டு பிள்ளைகளாக பாவித்தார்

நமது முதலமைச்சர் அனைத்து சமுதாயப் பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கி தன் வீட்டு சகோதரிகளாக நினைத்து பாவித்து வருகிறார் என்றார் இதனை தொடர்ந்து கடந்த 34 மாதங்களில் திமுக சாதனைகளை பட்டியலிட்டு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்.யுவராஜ் அமுதபாரதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!