செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அப்போது அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் பேருந்து வரும்போது கனகா (53) பெண் பக்தர்க்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அச்சரப்பாக்கம்
அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர் கூறினார் .
இதனால் உடன்வந்த பக்தர்கள் 53 பேரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.