Skip to content
Home » திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11-வயது சிறுமி. இவர்  அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் சிறுமியை திருச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனை தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர். இந்நிலையில் டாக்டர்கள்  சிறுமி பலாத்காரம் செய்யபட்டதாக கூறினார்கள். இது குறித்து நேற்று அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற முதியவர் அந்த சிறுமியை துன்புறுத்தி  பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மணப்பாறை அனைத்து காவல் நிலைய மகளீர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் துவரங்குறிச்சியை சேர்ந்த வெங்கிடசாமி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்ததால் அவரை கைது செய்து போக்சோவில் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!