Skip to content
Home » 3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கங்காதரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது மைதீன் (45). ஆட்டோ டிரைவர். இவர் 2022, அக்டோபர் மாதம் முதல் 2023, மே மாதம் வரை 6 வயதுடைய இரு சிறுமிகள், 10 வயது சிறுமி ஆகியோரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமிகளில் ஒருவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். அப்போது ஷேக் முகமது மைதீன் மற்ற இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஷேக் முகமது மைதீனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜ் விசாரித்து ஷேக் முகமது மைதீனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 9 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், மூன்று சிறுமிகளுக்கும் முறையே ரூ. 2 லட்சம், ரூ. 2.50 லட்சம், ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!