Skip to content
Home » புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

புதர்களில் பதுங்கிய பாம்பு….கவுன்சிலர் முயற்சியால் பிடித்து அப்புறப்படுத்தினர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் முட்புதர்கள் அடர்ந்து  வளர்ந்திருந்ததால் விஷ பாம்புகள் அங்கு  தஞ்சம் அடைந்துள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள்  அங்கு  நடமாடுவதை  கண்ட பொதுமக்கள்  திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்  செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.  செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முட்புதர்களில் பதுங்கி இருந்த விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்புவை லாவகமாக பிடித்து அவற்றை வனத்துறை மூலம் அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் காலி மனைகளில் வளர்ந்துள்ள முட்புதர்களை மாமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் சீரிய முயற்சியால் பொக்ளின் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.

மாமன்ற உறுப்பினரின் இத்தகைய செயலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

காலி மனை உரிமையாளர்கள் அவர்களின் மனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி காலிமனை உரிமையாளர் களுக்கு மாமன்ற உறுப்பினர் செந்தில் அறிவுரை வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!