கோவையில் இருந்து இன்று ஒரு வேன் சேலம் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் ரூ.666 கோடி மதிப்புள்ள 810 கிலோ தங்க நகைகள் இருந்தது. இவை சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு சென்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சசிகுமார் என்பவர் ஓட்டிவந்தார். வேனில் பாதுகாப்புக்காக பாதுகாவலர் பால்ராஜ் என்பவரும் வந்தார்.
வேன் ஈரோடு மாவட்டம் பவானி அருகே வந்தபோது திடீரெனரோட்டில் கவிழ்ந்தது. தங்க நகைகள் பெட்டி பெட்டியாக பலத்த பாதுகாப்பான பேக்கிங்களில் இருந்ததால் அவை வெளியே சிதறி கொட்டவில்லை. வேன் கவிழ்ந்ததும் டிரைவரும், பாதுகாவலரும் காயமடைந்தனர். ஆனாலும் அவர்கள் சுதாரித்துக்கொண்டு மாற்று வேனை வரவழைத்து நகைகளை அந்த வேனுக்கு மாற்றி சேலத்துக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வழக்கமாக, முட்டை லாரி, டாஸ்மாக் லாரிகள் கவிழ்ந்தால் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து அள்ளிச்செல்வார்கள். இந்த விபத்தில் அதுபோன்று நடக்கவில்லை. காரணம் வேன் கவிழ்ந்தபோதும் அதில் இருந்தவர்கள் இருவரும் காயமடைந்த நி்லையிலும் உஷாராக இருந்ததால் நகைகளை பாதுகாத்து உரிய இடத்திற்கு அனுப்பி விட்டனர்.