அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு என தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான பதில் மனுவை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் தொடரப்பட்ட இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் ஆக.10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
