திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தபோது, 3 தற்காலிக செவிலியர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சசிகலா, குமார், திவ்யதர்ஷினி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. பணத்தை கொடுத்து ஏமாந்த திருவல்லிக்கேணி அரசு கோசா மகப்பேறு மருத்துவமனையின் தற்காலிக செவிலியர்கள் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
