சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்கரை தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் அவர் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
