மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவர் மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் தினமும் அங்குள்ள டீக்கடைக்கு வருவதை நோட்டம் விட்ட கும்பல் இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
