கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர், கோவைக்கு செல்லாமல் உருளிக்கல்லில் பாட்டி வீட்டில் இருந்துள்ளார். மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ( 20 ) (திருமணம்
ஆகாதவர்) இவர்கள் 2 பேரும் டூவீலரில் வால்பாறையில் இருந்து உருளிக்களுக்கு சென்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த சேஷக்கல் முடியில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி அரசு பஸ்சை டிரைவர் ஜெயக்கொடி ஓட்டி வந்துள்ளார். உருளிககல் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது தீடீர் என என பேருந்து பஸ் திரும்பியதால் அப்போது டூவீலரில் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். உடனடியாக அப்பகுதியில் விபத்து ஏற்பட்டதை அறிந்த ஓட்டுநர் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டார். இதனை அறிந்த பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் இரு வார் உயிர்ழப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.