Skip to content
Home » அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு திட்டங்களை கண்காணிக்க 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூருக்கு நந்தகோபால் மற்றும் திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளை கண்காணிக்கவே மேற்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!