திருவாரூர், நன்னிலம் அருகே அரசு பள்ளியில், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய சிலிண்டர் மாற்றி சமையல் பணி தொடங்கியது
இந்த நிலையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் . மேலும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.