புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில்உள்ள கிராம சேவை மைய கட்டிட கிரில் கம்பி இடுக்கில் மாட்டிக்கொண்ட ராஜேந்திரன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே கழுத்தைவெளியே எடுக்கமுடியாமல் இறந்துபோனார். இந்த சம்பவம்தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ராஜேந்திரன் கம்பியை பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்தபோது கால்
வழுக்கியதல் தலை கேட் மீது வேகமாக மோதியபோது அவரது தலை கம்பி இடைவெளிக்குள் புகுந்து விட்டது. அதே நேரத்தில் அவரால் கம்பியை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் கம்பியில்இடைவெளியில் கழுத்து மாட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்து இருக்கலாம் என கூறியுள்ளனர். இறந்துபோன ராஜேந்திரன் டிரைவராக வேலை செய்து வந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.