சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர்கள் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை சார்ந்த கோரிக்கைகள் மீது அமைச்சர் ஆதவ் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய சபாநாயகர், எம்எல்ஏக்கள் தொகுதியை கவனிப்பது போல் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். எம்எல்ஏக்கள் விடுதியில் நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
