Skip to content

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுக்க முயற்சியா ??. சிறுமியின் உடல் மாயமானதாக தகவல் பரவியதை அடுத்து இடுகாட்டில் குவிந்த உறவினர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி
மேகலா (33). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது இரண்டாவது மகள் தர்ஷிகா (12) பந்தநல்லூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவரது, உடல் நேற்று அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை இடுகாடு வழியாக வந்த சிலர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது சிறுமியின் உடை மற்றும் லேசாக வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது தோண்டி அடுத்த சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் திருவிடைமருதூர் சாந்த மீனா சம்பவ இடத்திற்கு வந்தார். இதனையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் மேலும் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். தோண்டியதில் சிறுமியின் உடல் இருந்தது.

உறவினர்கள் உடலை எப்படி நேற்று புதைத்தார்களோ அதே மாதிரி இருந்தாதால் உடலை மேற்கொண்டு எடுக்க வேண்டாம். உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உறவினர்களிடம் அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு உடலை மண்ணை போட்டு மூடினர். மேலும் யார் தோண்டினார்கள் இனிமேல் இதுபோல் சம்பவம் நடைபெற கூடாது என விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!