மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேவையில்லாத அவமானங்களை தாங்கி கொள்ள முடியாது. தனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை எனவும் ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்துள்ளதாகவும், தனது குடும்பத்தை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் எனவும் சீறியுள்ளார்.
