பெங்களூரு காமாக்ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக் காலை குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, குடும்பத்தார் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர்கள், குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.