Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் வசிப்பவர்கள் மற்றும் மலைப்பகுதிக்குச் செல்பவர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • நாளை (ஜூலை 5): தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • ஜூலை 10 வரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மாநிலத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சென்னைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!