மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி. மகாபாரதி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,காவல்துறை
துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ,வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .நாகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது )நரேந்திரன் ,ஆய்வாளர் திரு.ராம்குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அடைந்த வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.