Skip to content
Home » திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடராஜன் நேற்று முன்தினம் அவரது விவசாய தோட்டத்தில் உழவு செய்துவிட்டு டிராக்டர் களப்பையோடு நடராஜன் வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோவில் பகுதியில் டிராக்டர் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலப்பையும் மற்றும் டிப்பரை நிறுத்தி வைத்துள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் நடராஜனின் 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை கலப்பையோடு மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் காணகிளியநல்லூர் காவல் நிலையத்தில் டிராக்டர் உரிமையாளர் நடராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!