Skip to content
Home » வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சிங்கானோடை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக உறவினர்கள் நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 15 க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை எடுத்துச் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது திருக்கடையூரில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார் வந்து மோதியதில் துரைராஜன் உறவினரான ஆனந்தன் மனைவி ஜெயா (55) என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொறையார் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துரைராஜின் உறவினர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர், நாதஸ்வர மேளம் வித்வான்கள் உள்ளிட்ட 6 பேர் கை, கால், தலை ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உறவினர் ஒருவருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு 108 வாகனம் மூலம் ‌ மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சுப நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!