Skip to content
Home » வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி உள்ளனர்.

அப்போது மீண்டும் வீட்டுக்கு வந்த அனிதா தனசீலி வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக மர்மநபர்கள் 3 பேர் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓட முயன்றனர். அனிதாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தப்பியோடியவர்களில் 2 பேரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த வேடப்பன் (55), பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்த விஜய் (34) என்பது தெரியவந்தது. தப்பியோடிய நபர் பட்டுக்கோட்டையை சேர்ந்த அபிமன்யூ என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடப்பன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த வேடப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தப்பியோடிய அபிமன்யூவையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!